Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ திறந்த நிலையில் கட்டுமான பொருள் எடுத்து செல்லும் வாகனங்களால் ஆபத்து

திறந்த நிலையில் கட்டுமான பொருள் எடுத்து செல்லும் வாகனங்களால் ஆபத்து

திறந்த நிலையில் கட்டுமான பொருள் எடுத்து செல்லும் வாகனங்களால் ஆபத்து

திறந்த நிலையில் கட்டுமான பொருள் எடுத்து செல்லும் வாகனங்களால் ஆபத்து

ADDED : ஜூலை 07, 2024 02:47 AM


Google News
கரூர்:கரூர் மாநகராட்சி பகுதி சாலைகளில், திறந்த நிலையில் கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லும் நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், அரசு மற்றும் தனியார் சார்பில் கட்டுமான பணிகள் நடக்கிறது. இப்பணிகளுக்காக மணல், செங்கல், பி.சாண்ட், ஜல்லிக்கற்கள் போன்றவை லாரிகளில் ஏற்றப்பட்டு, மாநகர சாலைகள் வழியாக பணிகள் நடக்கும் பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது. சுக்காலியூர், தான்தோன்றிமலை, ராயனுார், காந்திகிராமம், பசுபதிபாளையம் போன்ற பிரதான பகுதிகளின் வழியாக லாரிகளில் திறந்த நிலையில் கட்டுமான பொருட்கள் ஏற்றி செல்லப்படுகிறது.

எந்தவித பாதுகாப்பும் இன்றி, கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்படும் போது, பின்னால் வரும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். கண்களில் துாசி விழுந்து சிறு விபத்துக்கள் நடக்கிறது. மாநகர பகுதிகளில் கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் போது, பாதுகாப்புடன் செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us