Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ விளையாட்டு மைதானத்தை ஒட்டி வாகனம் நிறுத்துவதால் நெரிசல்

விளையாட்டு மைதானத்தை ஒட்டி வாகனம் நிறுத்துவதால் நெரிசல்

விளையாட்டு மைதானத்தை ஒட்டி வாகனம் நிறுத்துவதால் நெரிசல்

விளையாட்டு மைதானத்தை ஒட்டி வாகனம் நிறுத்துவதால் நெரிசல்

ADDED : ஜூன் 14, 2024 01:03 AM


Google News
கரூர், கரூர், காந்திகிராமத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது.

இந்த மைதானத்தை ஒட்டி சரக்கு வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அரகில் தள்ளு வண்டி கடைகளும் போடப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகிறது. மாலை நேரத்தில் நடை பயிற்சி செய்ய மைதானத்திற்குள் பொதுமக்கள் வரமுடியாமல் தவிக்கின்றனர். சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, சரக்கு வாகனங்களை அப்பகுதியில் நிறுத்த அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us