Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ புதர்மண்டி கிடக்கும் கழிவுநீர் வாய்க்கால்

புதர்மண்டி கிடக்கும் கழிவுநீர் வாய்க்கால்

புதர்மண்டி கிடக்கும் கழிவுநீர் வாய்க்கால்

புதர்மண்டி கிடக்கும் கழிவுநீர் வாய்க்கால்

ADDED : ஜூலை 08, 2024 05:28 AM


Google News
கரூர் : கரூர் அருகே, கழிவுநீர் வாய்க்காலில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்-றனர்.

கரூர் - திருச்சி சாலை, கொளந்தானுார் தெரசா கார்னர் பகு-தியில், கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. அதில், அதிகளவில் செடி, கொடிகள் முளைத்துள்ளன. மேலும், கழிவுநீர் வாய்க்-காலில் பல இடங்களில் மண் திட்டுக்கள் உள்ளன.

இதனால், கடந்த மாதம் பெய்த மழையின் போது, திருச்சி சாலை தெரசா கார்னர் பகுதியில், மழைநீர் சாலையில் ஓடியது. இதனால், பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், தென் மேற்கு பருவமழை தீவிரமடையும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், தெரசா கார்னர் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்-காலில் முளைத்துள்ள செடி, கொடிகள், மண் திட்டுக்கள், தேங்கி-யுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us