Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கார்வழி அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்

கார்வழி அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்

கார்வழி அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்

கார்வழி அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்

ADDED : ஜூன் 15, 2024 07:01 AM


Google News
அரவக்குறிச்சி : கார்வழி அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, ஆபத்தான வளைவில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்.

க.பரமத்தி ஒன்றியம், கார்வழி கடைவீதி பகுதியில் இருந்து குப்பகவுண்டன்வலசு செல்லும் நெடுஞ்சாலையில், அரசு உயர்நிலைப் பள்ளி அருகே ஆபத்தான வளைவு உள்ளது.

இதன் வழியாக அத்திபாளையம் முதல் குப்பகவுண்டன்வலசு செல்லவும், இதே போல பல்வேறு ஊர்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. சில நேரங்களில், கார்வழி அரசு உயர்நிலைப் பள்ளி அருகே ஆபத்தான வளைவில் வாகனங்கள், அதி வேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் காயமடைந்து வருகின்றனர்.

இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்க, வேகத்தடை அமைக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us