Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமண விழா அனுமதியை ரத்து செய்ய வேண்டும்'

'பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமண விழா அனுமதியை ரத்து செய்ய வேண்டும்'

'பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமண விழா அனுமதியை ரத்து செய்ய வேண்டும்'

'பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமண விழா அனுமதியை ரத்து செய்ய வேண்டும்'

ADDED : ஜூலை 17, 2024 08:51 AM


Google News
கரூர், : ஆகம விதிகளுக்கு முரணாக, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆக., 12ல் நடக்கும் தெய்வ திருமண விழா அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என, பசுபதீஸ்வரர் வழிபாடு மன்றம் சார்பில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயம் மற்றும் 1,000 ஆண்டுகள் பழமையானது கரூர் கல்யாண பசுப-தீஸ்வரர் கோவில். இங்கு ஆகம விதிகளுக்கு முரணாக, தனியார் அமைப்பு சார்பில் தெய்வ திருமண விழா நடக்கிறது. இந்த விழாவில் சீர் வரிசை கொண்டு வருதல், அன்ன தானம் நடத்-துவதாக கூறி வசூல் செய்கின்றனர். நன்கொடை வாங்குவதற்கு எந்த ரசீதும் பக்தர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. வியாபாரிகள், பொது-மக்களிடம் பணம் வசூல் செய்கின்றனர். வரும் ஆக., 12ல் தெய்வ திருமண விழா நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும். ஹிந்து-சமய அறநிலையத்துறை சார்பில், ஆகம விதிப்-படி விழாவை நடத்த வேண்டும்.

அப்படி விழாவை ரத்து செய்யவில்லை என்றால், ஆக., 10, 11, 12 ஆகிய நாட்களில் கோவில் கோபுரம் முன்புறம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us