Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வெண்டைக்காய் சாகுபடி பணிகளில் விவசாயிகள்

வெண்டைக்காய் சாகுபடி பணிகளில் விவசாயிகள்

வெண்டைக்காய் சாகுபடி பணிகளில் விவசாயிகள்

வெண்டைக்காய் சாகுபடி பணிகளில் விவசாயிகள்

ADDED : ஜூன் 19, 2024 01:41 AM


Google News
கிருஷ்ணராயபுரம், உடையந்தோட்டம் பகுதியில், வெண்டைக்காய் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், புனவாசிப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கு தேவையான தண்ணீர், கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. தற்போது வெண்டைக்காய் செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் பிடித்து வருகிறது. மேலும் விளைந்த காய்களை, விவசாயிகள் பறித்து உள்ளூர் வாரச்சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது காய்கறி வரத்து சீராக உள்ளது. வெண்டைக்காய் கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வெண்டைக்காய் சாகுபடி மூலம், ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us