Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/பள்ளி மாணவி பலமுறை பலாத்காரம் காமுக உடற்கல்வி ஆசிரியருக்கு 'கம்பி'

பள்ளி மாணவி பலமுறை பலாத்காரம் காமுக உடற்கல்வி ஆசிரியருக்கு 'கம்பி'

பள்ளி மாணவி பலமுறை பலாத்காரம் காமுக உடற்கல்வி ஆசிரியருக்கு 'கம்பி'

பள்ளி மாணவி பலமுறை பலாத்காரம் காமுக உடற்கல்வி ஆசிரியருக்கு 'கம்பி'

ADDED : ஜன 07, 2024 02:06 AM


Google News
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், இடலாக்குடி வட்டவிளை, காமராஜர் தெருவை சேர்ந்த சுந்தர்சிங், 32; மயிலாடி பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தார்.

இவர், பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவியிடம் பழகி, அவருக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அழகப்பபுரத்தில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்ற மாணவியை, தன் காரில் வைத்து சுந்தர்சிங் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபோல பலமுறை அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து, மாணவி தன் தாயிடம் தெரிவித்தார். மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் சிங்கை கைது செய்தனர்.

சுந்தர் சிங்கிற்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். 10 மாதங்களுக்கு முன் தான் அந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியில் சேர்ந்து உள்ளார்.

அவரது மொபைல் போனை போலீசார் ஆய்வு செய்தபோது, ஏராளமான பெண்களின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் உள்ளன. பெண்களிடம் வீடியோ காலில் பேசும்போது, ஆடைகளை கழற்ற சொல்லி, அதையும் வீடியோவாக பதிவு செய்து உள்ளார்.

அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதில், வீடியோவில் உள்ள ஒரு பெண் பள்ளி ஆசிரியை எனவும் தெரிய வந்துள்ளது.

சுந்தர் சிங் மாணவியர் வேறு யாரையும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கி உள்ளாரா, அவரது வலையில் வீழ்ந்த பெண்கள் யார், யார் என, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us