Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ டூ - வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

டூ - வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

டூ - வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

டூ - வீலரில் இருந்து விழுந்த வாலிபர் பலி

ADDED : செப் 22, 2025 10:51 PM


Google News
காஞ்சிபுரம்:டூ - வீலரில் சென்ற வாலிபர், நிலை தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம், ஓரிக்கை பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஆறுமுகன் மகன் லோகநாதன், 18.

இவர், நண்பர் பரணிகுமார், 18, என்பவருடன், 'பல்சர்' இருசக்கர வாகனத்தில், உத்திரமேரூர் நோக்கி நேற்று சென்றுக்கொண்டிருந்தனர்.

குருவிமலை சமுதாயக்கூடம் அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில், வாகனத்தில் பின்புறம் அமர்ந்து பயணித்த லோகநாதன், வாகனத்தை ஓட்டிய பரணிகுமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் பரிசோதனை செய்ததில், லோகநாதன் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை ஓட்டிய பரணிகுமார், தீவிர சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us