/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தேசிய அளவிலான ஓவியப்போட்டி காஞ்சி மாணவ -- -மாணவியர் சிறப்பிடம் தேசிய அளவிலான ஓவியப்போட்டி காஞ்சி மாணவ -- -மாணவியர் சிறப்பிடம்
தேசிய அளவிலான ஓவியப்போட்டி காஞ்சி மாணவ -- -மாணவியர் சிறப்பிடம்
தேசிய அளவிலான ஓவியப்போட்டி காஞ்சி மாணவ -- -மாணவியர் சிறப்பிடம்
தேசிய அளவிலான ஓவியப்போட்டி காஞ்சி மாணவ -- -மாணவியர் சிறப்பிடம்
ADDED : செப் 22, 2025 10:59 PM
காஞ்சிபுரம்:தேசிய அளவிலான ஓவியப் போட்டிகளில், காஞ்சி மாணவ- - மாணவியர் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
பிரபல ஸ்டேஷனரி மற்றும் ஓவியப் பொருட்களின் நிறுவனம் சார்பில், தேசிய அளவிலான ஆன்லைன் ஓவியப் போட்டிகள் சமீபத்தில் நடத்தியது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஓவியம் பயிற்சி பெற்ற மாணவ- - மாணவியர்கள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சோல் ஆப் ஆர்ட்ஸ் இந்தியா என, அழைக்கப்படும் ஓவிய பயிற்சி பள்ளியைச் சேர்ந்த மாணவ- - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், ஆதித்யா இரண்டாவது பரிசும்; ஹர்ஷிகா மூன்றாவது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.