/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கங்கையம்மனுக்கு வரும் 31ல் கோடை உத்சவம் துவக்கம் கங்கையம்மனுக்கு வரும் 31ல் கோடை உத்சவம் துவக்கம்
கங்கையம்மனுக்கு வரும் 31ல் கோடை உத்சவம் துவக்கம்
கங்கையம்மனுக்கு வரும் 31ல் கோடை உத்சவம் துவக்கம்
கங்கையம்மனுக்கு வரும் 31ல் கோடை உத்சவம் துவக்கம்
ADDED : மே 27, 2025 07:27 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி, பூக்கடை சத்திரம் அருகில் உள்ள கங்கையம்மனுக்கு, வரும் 31ம் தேதி, கோடை உத்சவம் துவங்குகிறது. இதில், நள்ளிரவு 12:00 மணிக்கு அம்மன் சிரசு வீதியுலாவும், ஜூன் 1ம் தேதி, பிற்பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்படுகிறது.
இரவு 9:00 மணிக்கு சிறுவஞ்சிபட்டு ஞானமுருகன் தெருகூத்து குழுவினரின், ‛இரண்ய விலாசம்' என்ற புராண நாடகம் நடக்கிறது.