Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூரில் தெருநாய்களால் வாகன ஓட்டிகள் அச்சம்

உத்திரமேரூரில் தெருநாய்களால் வாகன ஓட்டிகள் அச்சம்

உத்திரமேரூரில் தெருநாய்களால் வாகன ஓட்டிகள் அச்சம்

உத்திரமேரூரில் தெருநாய்களால் வாகன ஓட்டிகள் அச்சம்

ADDED : மே 21, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர்,:உத்திரமேரூர் பேரூராட்சியில், சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பேரூராட்சியில் வசிக்கும் மக்கள் பல்வேறு இடங்களுக்கு நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.

அப்போது, கும்பலாக சுற்றித்திரியும் நாய்கள் சிறுவர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோரை, விரட்டி சென்று கடிக்க பாய்கிறது.

மேலும், வெளியூர்களில் இருந்து உத்திரமேரூருக்கு பல்வேறு பணிகள் நிமித்தமாக வருவோரும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

எனவே, பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:

உத்திரமேரூரில் சமீப காலங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும், நாய்கள் வாகனங்களில் செல்வோரையும் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது.

இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே, தெரு நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us