Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ரூ.23 லட்சம் உண்டியல் காணிக்கை

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ரூ.23 லட்சம் உண்டியல் காணிக்கை

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ரூ.23 லட்சம் உண்டியல் காணிக்கை

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ரூ.23 லட்சம் உண்டியல் காணிக்கை

ADDED : ஜூன் 13, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீபெரும்புதுார்:வல்லக்கோட்டை முருகன் கோவிலில், உண்டியல் திறந்து பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை நேற்று எண்ணப்பட்டது, இதில், 23 லட்சம் ரூபாய், 82 கிராம் தங்கம், 1,400 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக கிடைத்தது.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி, கடந்த பிப்., மாதம் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், கோவில் உள்ள 10 உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன.

இதில், 22 லட்சத்து 87,945 ரூபாய், 82 கிராம் தங்கம், 1,400 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. இதில், கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், ஆய்வர் திலகவதி உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us