Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாகனம் மோதியதில் சேதமான மின் கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

வாகனம் மோதியதில் சேதமான மின் கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

வாகனம் மோதியதில் சேதமான மின் கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

வாகனம் மோதியதில் சேதமான மின் கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

ADDED : செப் 10, 2025 03:09 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பால மைய தடுப்பில், வாகனம் மோதியதில் சேதமான மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார் சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக சென்னைக்கு, பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலம் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில், மேம்பாலத்தின் மைய தடுப்பில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், கடந்த மாதம் மேம்பாலம் வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஒரு மின் கம்பம் சேதமாகி சாய்ந்தது. இதனால், அப்பகுதியில் இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் இல்லாததால், வாகனங்கள் தடுமாறி செல்கின்றன.

எனவே, பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பால மைய தடுப்பில் சேதமடைந்துள்ள மின் கம்பத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us