/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/செய்முறை தேர்வு பிப்., 12ல் துவக்கம்செய்முறை தேர்வு பிப்., 12ல் துவக்கம்
செய்முறை தேர்வு பிப்., 12ல் துவக்கம்
செய்முறை தேர்வு பிப்., 12ல் துவக்கம்
செய்முறை தேர்வு பிப்., 12ல் துவக்கம்
ADDED : பிப் 09, 2024 11:07 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, தனியார் மற்றும் நலத்துறை என, 107 பள்ளிகள் உள்ளன. இதில், 80 அறிவியல் மற்றும் கணினி செய்முறை தேர்வு மையங்களில், நாளை மறுதினம் முதல் செய்முறை தேர்வு துவங்க உள்ளன.
அதன்படி, பிப்., 12 - 17ம் தேதி வரையில், பிளஸ் 2 மாணவ - -மாணவியருக்கும், பிப்., 19 - 24ம் தேதி வரையில், பிளஸ் 1 மாணவ- - மாணவியருக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளன.
இந்த செய்முறை தேர்வுகளுக்கு ஏற்ப, கண்காணிப்பாளர் மற்றும் பார்வையாளர் ஆகியோரை கல்வி துறையினர் நியமித்து உள்ளனர்.