Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குற்றங்கள் தடுப்பது குறித்து போலீசார் விழிப்புணர்வு

குற்றங்கள் தடுப்பது குறித்து போலீசார் விழிப்புணர்வு

குற்றங்கள் தடுப்பது குறித்து போலீசார் விழிப்புணர்வு

குற்றங்கள் தடுப்பது குறித்து போலீசார் விழிப்புணர்வு

ADDED : ஜூன் 06, 2025 02:01 AM


Google News
உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு, 35 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுக்க, போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, புலியூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு குற்றச்சம்பவங்கள் தடுப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, எஸ்.ஐ., பாபு தலைமையில் நேற்று நடந்தது.

அதில், வெளியூருக்கு செல்லும்போது காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது.

வீட்டுச்சாவியை மற்றவர் கண்ணில் படும்படி வைக்கக்கூடாது. சந்தேகப்படும்படியாக யாராவது கிராமத்தில் இருந்தால், காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என, பொதுமக்களுக்கு உத்திரமேரூர் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us