Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பஸ் நிலையத்தில் சாலை சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்

பஸ் நிலையத்தில் சாலை சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்

பஸ் நிலையத்தில் சாலை சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்

பஸ் நிலையத்தில் சாலை சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்

ADDED : மே 21, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை, செங்கல்பட்டு, ராணிபேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்களூரு, திருப்பதி என, வெளி மாநிலங்களுக்கும், அரசு மற்றும் தனியார் பேருந்தும், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நகர பேருந்துகளும், மினி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

தினமும் ஆயிரக்கணக்கான பயணியர், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில், சில நாட்களாக பெய்தும் வரும் மழையால் வேலுார், தாம்பரம் செல்லும் பேருந்து மற்றும் மினி பேருந்து நிறுத்தம் அருகில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், நடந்து செல்லும் பாதசாரிகளும், பேருந்தை பிடிக்க ஓடும் பயணியரும் நிலை தடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சேதமடைந்த சாலையை, ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us