Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 22ல் துவக்கம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 22ல் துவக்கம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 22ல் துவக்கம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 22ல் துவக்கம்

ADDED : செப் 07, 2025 10:22 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நடப்பாண்டிற்கான நவராத்திரி விழா, வரும் 22ம் தேதி சண்டி ஹோமத்துடன் துவங்குகிறது.

விழாவையொட்டி, தினமும் காலை காமாட்சியம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்காரமும், இரவு, நவராத்திரி மண்டபத்தில் காமாட்சியம்மன் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி, சூரசம்ஹார நிகழ்ச்சியும், தீபாராதனையும் மற்றும் பிரபல சங்கீத வித்வான்கள் பங்கேற்கும் சங்கீத கச்சேரியும் நடைபெறுகின்றன.

முக்கிய நாட்களில் நவராத்திரி வைபவத்தில் லட்சார்ச்சனை மற்றும் சதுர்வேத பாராயணம், சண்டி ஸப்தசதி பாராயணமும் நடைபெறுகின்றன.

நவராத்திரி விழாவின் எட்டாம் நாளான வரும் 30ம் தேதி இரவு, துர்காஷ்டமி, துர்க்கை புறப்பாடு, சூரசம்ஹாரம் பூர்த்தியும், அக்., 1ம் தேதி இரவு சரஸ்வதி பூஜையும், அக்., 2ம் தேதி இரவு விஜயதசமி, நவாவர்ணம் பூர்த்தியும் நடைபெற உள்ளது.

அக்., 3ம் தேதி இரவு ஸஹஸ்ர கலஸ ஸ்தாபனமும், அக்., 4ம் தேதி காலை ஸஹஸ்ர கலசாபிஷேகமும், இரவு ஊஞ்சல் உத்சவத்துடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது.

நவராத்திரி விழாவையொட்டி தினமும் இரவு 7:30 மணிக்கு, காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் சாரதா நவராத்திரி கலை நிகழ்ச்சிகள், டிரஸ்ட் சார்பில் காமாட்சியம்மன் கோவிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் தினமும் இரவு 7:30 மணிக்கு பிரபல சங்கீத வித்வான்கள் பங்கேற்கும் இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us