Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை

நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை

நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை

நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை

ADDED : செப் 07, 2025 10:23 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின்கீழ், நேற்று நடந்த ௮ கி.மீ., துார நடைபயிற்சி இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, 2023 நவம்பர் மாதம் முதல், மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நடப்போம் நலம் பெறுவோம்' என்ற ௮ கி.மீ., துார நடைபயிற்சி இயக்கத்தை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது.

அதன்படி செப்., மாதத்திற்கான, 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின்கீழ், நேற்று நடந்த நடைபயிற்சி இயக்கத்தை, தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகில் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி நல அலுவலர் அருள்நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நடைபயிற்சியில் மருத்துவ துறை அதிகாரிகள், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்கள், மாநகராட்சி தற்காலிக பணியாளர்கள், தன்னார்வலர்கள் என, 80 பேர் பங்கேற்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் வட்டார சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் நடைபயிற்சி மேற்கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us