/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையை மறித்து நிற்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் சாலையை மறித்து நிற்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையை மறித்து நிற்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையை மறித்து நிற்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையை மறித்து நிற்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 16, 2025 01:09 AM

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, பாலுார் -- காஞ்சிபுரம் உள்ளிட்டவற்றை இணைக்கும் முக்கிய சாலையாக வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை உள்ளது.
ஒரடகம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும பல ஆயிரக்கணக்காகன வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன.
எப்போதும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், காரணித்தாங்கல், செரப்பனஞ்சேரி, பனப்பாக்கம், வஞ்சுவாஞ்சேரி, ஆரம்பாக்கம், சாலமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மாடுகளை வைத்திருப்பவர்கள், தங்களில் மாடுகளை கொட்டகையில் வைத்து பரமரிக்காமல், சாலையில் அவிழ்த்து விடுகின்றனர்.
அவை, கூட்டம் கூட்டமாக சாலையில் வலம் வருவதோடு, சாலையில் நடுவே படுத்தும் ஓய்வெடுக்கிறது. மேலும், அவை திடீரென சாலையின் குறுக்கும் நெடுக்கமாக எழுந்து ஓடுவதால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள், திடீரென சாலையின் குறுக்கே வரும் மாட்டின் மீது மோதி, விழுந்து காயமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது
எனவே, நெடுஞ்சாலையில் விபத்திற்கு வழிவகுக்கும் வகையில் திரியும் மாட்டின் உரிமையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, குன்றத்துார் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.