Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கீழம்பியில் சேதமான சாலை தடுப்பு சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

கீழம்பியில் சேதமான சாலை தடுப்பு சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

கீழம்பியில் சேதமான சாலை தடுப்பு சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

கீழம்பியில் சேதமான சாலை தடுப்பு சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

ADDED : ஜூலை 05, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
கீழம்பி,:கீழம்பியில் சேதமான சாலை தடுப்பை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பியில் இருந்து முசரவாக்கம், கிளார், பாலுசெட்டிசத்திரம் செல்லும் பிரதான சாலையோரம் உள்ள விவசாய நிலங்கள் பள்ளமான பகுதியில் அமைந்துள்ளன.

வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளமாக உள்ள விவசாய நிலத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குவதை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், விவசாய நிலங்களின் ஓரம் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன் இவ்வழியாக சென்ற கனரக வாகனம் மோதியதில், சாலை வளைவு பகுதியில் உள்ள சாலை தடுப்பின் ஒரு பகுதி சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது.

கீழம்பி - முசரவாக்கம் சாலை வளைவில் சேதமடைந்த இரும்பு தடுப்பை அகற்றி விட்டு, புதிய தடுப்பு அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us