Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையோர பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சாலையோர பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சாலையோர பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சாலையோர பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 30, 2025 12:23 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாட்டித் தோப்பு சாலையோரம் ஏற்பட்ட பள்ளத்தை மண் கொட்டி சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி, 27வது வார்டு, தாட்டித்தோப்பு பிரதான சாலை வழியாக, கன்னிகாபுரம், ஏரிவாய், படப்பம், வள்ளுவபாக்கம், முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிக்கு பலர் சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், சாலையோரம் மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக மாறியுள்ளது.

இதனால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், தாட்டித்தோப்பு பிரதான சாலையோர பள்ளத்திற்கு மண் அணைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us