/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் விமரிசை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் விமரிசை
சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் விமரிசை
சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் விமரிசை
சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் விமரிசை
ADDED : ஜூலை 04, 2025 01:16 AM

குன்றத்துார்:சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று கருட சேவை உத்சவம் விமரிசையாக நடந்தது.
குன்றத்துார் அருகே உள்ள சோமங்கலம் பகுதியில், 900 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சவுந்தரவல்லி தாயார் உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இங்கு, ஆனி மாதம் அஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, பெருமாளுக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று காலை, கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.