Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விநாயகர் - துர்க்கை கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

விநாயகர் - துர்க்கை கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

விநாயகர் - துர்க்கை கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

விநாயகர் - துர்க்கை கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

ADDED : ஜூன் 07, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சி, வேளிங்கப்பட்டரை, சக்தி விநாயகர் மற்றும் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் அறங்காவலர் உறுப்பினர்கள், கும்பாபிஷேக விழா குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்,டன.

நேற்று, காலை 7:30 மணிக்கு, வேதவிற்பன்னர்கள், இரு கோவில் கோபுர விமான கலசத்திற்கும், தொடர்ந்து அனைத்து சுவாமிகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷகம் நடத்தி வைத்தனர்.

காலை 10:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. விழாவில், வேளிங்கப்பட்டரை, ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us