Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ஒத்திவைப்பு

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ஒத்திவைப்பு

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ஒத்திவைப்பு

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ஒத்திவைப்பு

ADDED : ஜூன் 17, 2025 07:03 PM


Google News
காஞ்சிபுரம்:விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், மாதந்தோறும், கலெக்டர் தலைமையில், நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை மறுதினம், காலை 10:30 மணிக்கு நடைபெறும் என, அறிவிப்பு வெளிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிர்வாக காரணங்களால், வரும் 27ம் தேதி நடைபெறும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம், காலை 10:30 மணிக்கு வழக்கம்போல, கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெறும் எனவும், வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு, மின்வாரியம், வருவாய் துறை என, வேளாண் தொடர்பான துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us