Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 20ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

20ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

20ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

20ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ADDED : ஜூன் 13, 2025 07:50 PM


Google News
காஞ்சிபுரம்:விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 20ல் நடக்க இருப்பதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு :

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் 20 ல், காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், காலை 10:30 மணிக்கு, கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுனர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

வேளாண் துறை, தோட்டக்கலை, மின்வாரியம், வருவாய் துறை, கூட்டுறவு, கால்நடை என, வேளாண் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை நேரடியாகவும், மனுவாகவும் தெரிவிக்கலாம். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்மை தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us