Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பவளவண்ணர் கோவில் குளத்தில் துாய்மை பணி

பவளவண்ணர் கோவில் குளத்தில் துாய்மை பணி

பவளவண்ணர் கோவில் குளத்தில் துாய்மை பணி

பவளவண்ணர் கோவில் குளத்தில் துாய்மை பணி

ADDED : ஜூன் 16, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பவளவண்ண பெருமாள் கோவில் குளம் துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.

காஞ்சிபுரம் பவளவண்ண பெருமாள் கோவில் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பை குவியலாக இருந்தது. பிளாஸ்டக் குவியலை அகற்றி குளத்தை சுத்தம் செய்ய வாலாஜாபாத் விதைகள் தன்னார்வ அமைப்பினர் முடிவு செய்தனர்.

அதன்படி கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது. இதில், திருவேணி அகாடமி மாணவ - மாணவியர், சிந்தி கலை அறிவியல் கல்லுாரி மாணவ-- மாணவியர், காஞ்சி அன்னசத்திரம், பசுமை இந்தியா, வடலி உள்ளிட்ட அமைப்பினர், விதைகள் தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து, குளத்தில் சேகரித்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை குவியலை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us