Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பட்டியல் இனத்தவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

பட்டியல் இனத்தவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

பட்டியல் இனத்தவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

பட்டியல் இனத்தவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

ADDED : ஜூன் 06, 2025 08:24 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாட்கோ என அழைக்கப்படும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி தொழில்நுட்ப பயிற்சி; தொழில் உற்பத்தி பயிற்சி; டிஜிட்டல் திறன் பயிற்சி; இணைய தொழில்நுட்ப பயிற்சி; டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய பலவித பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இந்த பயிற்சியில் சேர விரும்பும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 2021 - 2024ம் ஆண்டு வரையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சி சேர விண்ணப்பிக்கும் இளைஞர்களின் குடும்பத்தினரின் வருவாய் 3 லட்சம் ரூபாய்க்கும் மிகையாமல் இருக்க வேண்டும். இந்த பயிற்சி பெற www.tahdco.com http://www.tahdco.com இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம். 55 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிக்கு, சென்னை விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினங்களை தாட்கோ வாயிலாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us