Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 330 மரக்கன்றுகள் நடும் விழா

330 மரக்கன்றுகள் நடும் விழா

330 மரக்கன்றுகள் நடும் விழா

330 மரக்கன்றுகள் நடும் விழா

ADDED : ஜூன் 06, 2025 02:06 AM


Google News
Latest Tamil News
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசி கிராமத்தில் உள்ள சமூக காட்டு பகுதியில், விதைகள் தன்னார்வ அமைப்பு மற்றும் காஞ்சிபுரம் மாமல்லன் மருத்துவமனை சார்பில் நேற்று நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

அப்பகுதி சமூக காட்டு பகுதியில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், இலுப்பை, புன்னை, கொடுக்காப்புளி, அழிஞ்சல், புரசை, இளவம்பஞ்சு, நெட்டிலிங்கம் உள்ளிட்ட பழமையான நாட்டு மர இனங்களான 280 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.

வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலர் வெங்கடேசன், விதைகள் தன்னார்வ அமைப்பு பசுமை சரண் மற்றும் திரிவேணி அகாடமி பள்ளி மாணவர் - மாணவியர் மரக்கன்றுகளை நட்டனர்.

l உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் கிராமத்தில், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

உதவி தலைமையாசிரியர் செல்வராஜ் தலைமை தாங்கினார். அதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டு, பள்ளி வளாகத்தில், வேம்பு, புங்கன் உள்ளிட்ட 50 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us