Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மம்மந்தாங்கல் கூட்டுச்சாலைகளில் வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா?

மம்மந்தாங்கல் கூட்டுச்சாலைகளில் வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா?

மம்மந்தாங்கல் கூட்டுச்சாலைகளில் வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா?

மம்மந்தாங்கல் கூட்டுச்சாலைகளில் வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா?

ADDED : ஜூன் 11, 2024 03:00 AM


Google News
Latest Tamil News
கூத்திரம்பாக்கம் : காஞ்சிபுரம் அடுத்த, வேடல் கிராமத்தில் இருந்து, கூத்திரம்பாக்கம் கிராமம் வழியாக, மம்மந்தாங்கல் கிராமத்திற்கு செல்லும் கூட்டுச்சாலை உள்ளது.

இந்த கூட்டுச்சாலை வழியாக, தினசரி 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. புதிய வாகன ஓட்டிகளுக்கு, எந்த ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் என, குழப்பமான நிலை ஏற்படுத்தும்.

உதாரணமாக, வேடல் சாலையில் இருந்து, கூத்திரம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் செல்வதற்கு பதிலாக, மம்மந்தாங்கல் கிராமத்திற்கு சென்று விடுகின்றனர். அங்கு, வாகனங்களை எளிதாக திருப்ப முடியாத சூழலில், வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.

இதை தவிர்க்க, பிரதான கூட்டுசாலைகள் பிரியும் இடங்களில் எந்த ஊருக்கு செல்லும் வழி என, வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டு, வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளின் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us