/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ராஜகுளத்தில் நாளை வரதர் தெப்பல் உத்சவம் ராஜகுளத்தில் நாளை வரதர் தெப்பல் உத்சவம்
ராஜகுளத்தில் நாளை வரதர் தெப்பல் உத்சவம்
ராஜகுளத்தில் நாளை வரதர் தெப்பல் உத்சவம்
ராஜகுளத்தில் நாளை வரதர் தெப்பல் உத்சவம்
ADDED : மார் 12, 2025 06:26 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளம் கிராமத்தில், மாசி மாத பவுர்ணமி தினத்தன்று, வரதராஜப் பெருமாள் தெப்பல் உத்சவத்திற்கு புறப்பாடு நடக்கும்.
நடப்பாண்டு, மாசி பவுர்ணமியை முன்னிட்டு நாளை, அதிகாலை 4:00 மணிக்கு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் புறப்பட்டு, வையாவூர், கவுரியம்மன் பேட்டை, சிட்டியம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு சென்ற பின், ராஜகுளம் கிராமத்தை சென்றடைவார்.
அங்குள்ள உத்சவ மண்டபத்தில், பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். அதை தொடர்ந்து, மாலை, 6:00 மணி அளவில் வரதராஜப் பெருமாள் ராஜகுளம் தெப்பலில் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வருவார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, சிட்டியம்பாக்கம் கிராமத்தினர் செய்துள்ளனர்.