Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மின்மோட்டார் பழுதால் பயன்பாடின்றி கழிப்பறை

மின்மோட்டார் பழுதால் பயன்பாடின்றி கழிப்பறை

மின்மோட்டார் பழுதால் பயன்பாடின்றி கழிப்பறை

மின்மோட்டார் பழுதால் பயன்பாடின்றி கழிப்பறை

ADDED : ஜூன் 08, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில், 10 ஆண்டுகளுக்கு முன் பொதுக் கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது.

ரயில் நிலையம் சுற்றியுள்ள பகுதியினர் மட்டுமின்றி, ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியரும் பொதுக் கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் கழிப்பறையின் தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டுள்ள நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதானது. பழுதடைந்த மின்மோட்டாரை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை.

இதனால், கழிப்பறை கட்டடம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, மின்மோட்டாரை பழுது நீக்குவதோடு கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், தொடர்ந்து முறையாக பராமரிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us