Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளம் அரங்கநாதபுரத்தில் மூடாததால் அபாயம்

குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளம் அரங்கநாதபுரத்தில் மூடாததால் அபாயம்

குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளம் அரங்கநாதபுரத்தில் மூடாததால் அபாயம்

குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளம் அரங்கநாதபுரத்தில் மூடாததால் அபாயம்

ADDED : ஜூலை 02, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் ஊராட்சியில் இருந்து, அய்யனேரி ஏரிக்கரை வழியாக, அரங்கநாதபுரம் கிராமம் வரையில், குடிநீர் குழாய் போடப்பட்டு உள்ளது.

இந்த குடிநீர் குழாய் ஆங்காங்கே இணைப்பு ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால், குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளம், மூடப்படாமல் உள்ளது.

புள்ளலுார் கிராமத்தில் இருந்து, அரங்கநாதபுரம் கிராமத்திற்கு செல்வோர் மற்றும் அரங்கநாதபுரம் கிராமத்தில் இருந்து புள்ளலுார் கிராமத்திற்கு செல்வோர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

எனவே, சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருக்கும் குடிநீர் குழாய்க்கு இணைப்பு ஏற்படுத்தி, பள்ளத்தை மூட வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us