Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை மரணம்

திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை மரணம்

திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை மரணம்

திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை மரணம்

ADDED : ஜூன் 11, 2024 03:01 AM


Google News
சென்னை : பெரவள்ளூரை சேர்ந்தவர் லோகேஷ், 40. இவர் சோழிங்கநல்லுாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் திருச்சியை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணுக்கும், திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலில் நேற்று முன்தினம் காலை திருமணம் நடந்தது.

நேற்று மதியம் மாப்பிள்ளை வீட்டுக்கு மணமக்கள் வந்துள்ளனர். இருவரும் அறையில் இருந்த போது, லோகேஷுக்கு திடீரென வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளி, மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக லோகேஷை மாதவரம் அருகே ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் லோகேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திரு.வி.க.நகர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜலட்சுமிக்கு இது இரண்டாவது திருமணம்; முதல் கணவர் கடந்த கொரோனா காலத்தில் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது.

லோகேஷ் இறப்பு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us