Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வரதராஜபுரம் கங்கையம்மனுக்கு கோடை உற்சவம் விமரிசை

வரதராஜபுரம் கங்கையம்மனுக்கு கோடை உற்சவம் விமரிசை

வரதராஜபுரம் கங்கையம்மனுக்கு கோடை உற்சவம் விமரிசை

வரதராஜபுரம் கங்கையம்மனுக்கு கோடை உற்சவம் விமரிசை

ADDED : ஜூன் 24, 2024 05:22 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரை, வரதராஜாபுரம் தெரு வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கங்கையம்மனுக்கு கோடை உற்சவம் நான்கு நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான உற்சவம் கடந்த 21ம் தேதி இரவு வரசித்தி விநாயகர் மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகத்துடன் துவங்கியது.

இதில், 2ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் தேதி, இரவு 9:00 மணிக்கு ஜலம் திரட்டும் நிகழ்வு நடந்தது. மூன்றாம் நாள் உற்சவமான நேற்று, காலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 8:00 மணிக்கும் வர்ணிப்புடன், அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டது.

இன்று, பிற்பகல் 12:00 மணிக்கு சீர்கஞ்சி வார்த்தலுடன் கோடை உற்சவம் நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகக்குழு, விழாக்குழு, வரதராஜபுரம்தெருவினர் இணைந்து செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us