Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மொபைல்போன் பறித்த இருவருக்கு காப்பு

மொபைல்போன் பறித்த இருவருக்கு காப்பு

மொபைல்போன் பறித்த இருவருக்கு காப்பு

மொபைல்போன் பறித்த இருவருக்கு காப்பு

ADDED : ஜூன் 11, 2024 09:01 PM


Google News
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டி, மொபைல் போன் பறித்து சென்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்.

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார், 19. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஆரநேரி பகுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், சுனில்குமார் நேற்று முன்தினம் இரவு, போந்துாரில் இருந்து, ஆரநேரிக்கு நடந்து சென்றார். அப்போது, 'ஸ்பிளண்டர்' பைக்கில் வந்த இருவர், சுனில்குமாரை மடக்கி, மறைந்து வைத்திருந்த கத்தியால் கையில் வெட்டி, அவரிடமிருந்து மொபைல் போனை பறித்து அங்கிருந்து தப்பினர்.

ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து, சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தேவேலுார் இ.பி., காலனியைச் சேர்ந்த முக்கேஷ், 23, நரேஷ்குமார், 23, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us