ADDED : ஜூன் 11, 2024 08:58 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் குடிமை பொருள், தனி தாசில்தார் தலைமையில், பறக்கும் படையினர் நேற்று முன் தினம் இரவு, காஞ்சிபுரம் தாயார் குளம் அண்ணா பூங்கா அருகே ஆய்வு செய்தனர்.
ரேஷன் கடையில் போடப்படும், 2,870 கிலோ ரேஷன் அரிசி, 60 மூட்டைகள் மற்றும் சிறிய லோடு வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சிறுகாவேரிப்பாக்கம் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.