Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காவணிப்பாக்கம் சாலையோரம் மண் கொட்டி சமன்படுத்த கோரிக்கை

காவணிப்பாக்கம் சாலையோரம் மண் கொட்டி சமன்படுத்த கோரிக்கை

காவணிப்பாக்கம் சாலையோரம் மண் கொட்டி சமன்படுத்த கோரிக்கை

காவணிப்பாக்கம் சாலையோரம் மண் கொட்டி சமன்படுத்த கோரிக்கை

ADDED : ஜூலை 16, 2024 01:06 AM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர்,

உத்திரமேரூர் ஒன்றியம், காவணிப்பாக்கம் கிராமத்தில் இருந்து, காப்பு காடு வழியாக பட்டா கூட்டுச்சாலை செல்லும் ஒன்றரை கி.மீ., துாரம் கொண்ட இணைப்பு சாலை உள்ளது.

காவணிப்பாக்கம் கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி சாலவாக்கம், திருமுக்கூடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவருகின்றனர்.

இந்த சாலை கடந்த ஆண்டுகளில் மிகவும் பழுதடைந்து இருந்ததை அடுத்து, சீரமைத்து தர அப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி, ஒருங்கிணைந்த கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 76 லட்சம் ரூபாய்செலவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இச்சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

சீரமைப்பு பணி செய்த இந்த சாலையின் இரு புறங்களிலும், மண் கொட்டி சமன்படுத்தாததால் சாலையோரம் பள்ளமாக உள்ளது. இதனால், பஸ், லாரி, வேன் போன்ற நான்குசக்கர வாகனங்கள் எதிரே வந்தால், இருசக்கரவாகனங்களில் செல்வோர் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடமில்லாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே,இச்சாலையோரத்தின் இரு புறங்களிலும் மண் கொட்டி சமன்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us