/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குண்டும் குழியுமான ஒரகடம் சர்வீஸ் சாலை குண்டும் குழியுமான ஒரகடம் சர்வீஸ் சாலை
குண்டும் குழியுமான ஒரகடம் சர்வீஸ் சாலை
குண்டும் குழியுமான ஒரகடம் சர்வீஸ் சாலை
குண்டும் குழியுமான ஒரகடம் சர்வீஸ் சாலை
ADDED : ஜூலை 09, 2024 04:05 AM

ஸ்ரீபெரும்புதுார் : ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 180க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. தவிர, வல்லம், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 1,200க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இங்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி, பல லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவ்வாறு, தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதுார் சாலைகளை பயன்படுத்தி, தனியார் பேருந்து, கார், பைக் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான வாகனங்களில் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
மேலும், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் கொண்டுவர மற்றும் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றிச் செல்ல என, தினமும் ஏராளமான லாரி, கன்டெய்னர், கனரக வாகனங்கள் என, ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்த நிலையில், ஒரகடத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை, குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
தற்போது, இரவு நேரங்களில் அவ்வப்போது பெய்து வரும் மழையினால், சாலை படு மோசமாக மாறி, வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.