/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வரும் 3ல் திரவுபதியம்மன் கோவில் விழா துவக்கம் வரும் 3ல் திரவுபதியம்மன் கோவில் விழா துவக்கம்
வரும் 3ல் திரவுபதியம்மன் கோவில் விழா துவக்கம்
வரும் 3ல் திரவுபதியம்மன் கோவில் விழா துவக்கம்
வரும் 3ல் திரவுபதியம்மன் கோவில் விழா துவக்கம்
ADDED : ஜூன் 28, 2024 01:44 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஜூலை -21ம் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவை முன்னிட்டு, வரும்- 2ம் கிராம தேவதை என, அழைக்கப்படும் ஏகாத்தம்மன் பொங்கலிடும் நிகழ்ச்சியும்,- 3ம் தேதி காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்க உள்ளது.
தினமும் பிற்பகல் 1:00 மணி அளவில், திருவண்ணாமலை மாவட்டம், நமண்டி கோவிந்தராஜுன் மஹாபாரத சொற்பொழிவு மற்றும் சிறுவஞ்சிப்பட்டு சீதாராமன் குழுவினர் நாடகம் நடைபெற உள்ளது.