Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ செரப்பனஞ்சேரியில் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

செரப்பனஞ்சேரியில் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

செரப்பனஞ்சேரியில் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

செரப்பனஞ்சேரியில் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ADDED : ஆக 01, 2024 01:07 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவத்து அதிகம் உள்ள இந்த சாலையில், வஞ்சுவாஞ்சேரி, செரப்பனஞ்சேரி, காரணித்தாங்கள், பனப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளை வைத்திருப்பவர்கள், தங்களின் மாடுகளை மேட்சலுக்காக சாலை விடுகின்றனர்.

அவை, போக்குவரத்திற்கு இடையூராக, பேருந்து நிறுத்தம் அருகே, சாலையில் நிற்கிறது. திடீரென சாலையின் குறுக்கு நெடுக்கமாக ஓடும் மாடுகளால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், மாட்டின் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர்.

மேலும், பேருந்து நிறுத்தின் அருகே கூட்டமாக நிற்கும் மாடுகளால், பள்ளி கல்லுாரி மாணவ - மாணவியர் உட்பட அனைத்து தரப்பினரும் அவதி அடைகின்றர்.

இதுகுறித்து செரப்பனஞ்சேரி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே, நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில், சாலையில் உலவும் மாடுகளை பிடித்து, கோ சாலையில் அடைக்க வேண்டுமனெ வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us