/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ போதையில் சாலையோரம் படுத்திருந்தவர் மீது கார் ஏறி பலி போதையில் சாலையோரம் படுத்திருந்தவர் மீது கார் ஏறி பலி
போதையில் சாலையோரம் படுத்திருந்தவர் மீது கார் ஏறி பலி
போதையில் சாலையோரம் படுத்திருந்தவர் மீது கார் ஏறி பலி
போதையில் சாலையோரம் படுத்திருந்தவர் மீது கார் ஏறி பலி
ADDED : ஜூன் 24, 2024 05:16 AM
குன்றத்துார்: மாங்காடு அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே, போதையால் சாலையோரம் படுத்திருந்தவர், கார் ஏறியதில் உயிரிழந்தார்.
மாங்காடு, சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் வேலு, 52; துணி வியாபாரி. நேற்று முன்தினம், மாங்காடு ஜனனி நகரில் உள்ள டாஸ்மாக் கடையில், மது அருந்திவிட்டு போதையில் சாலையோரம் படுத்து துாங்கினார்.
அப்போது, டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்தவர், காரை சாலையோரம் நிறுத்தியபோது, வேலு படுத்திருப்பதை அறியாமல் அவர் மீது ஏற்றினார். இதில், பலத்த காயமடைந்த வேலு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வேலு உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.