Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கரூர் கூட்டுச்சாலையில் வேகத்தடைக்கு வலியுறுத்தல்

கரூர் கூட்டுச்சாலையில் வேகத்தடைக்கு வலியுறுத்தல்

கரூர் கூட்டுச்சாலையில் வேகத்தடைக்கு வலியுறுத்தல்

கரூர் கூட்டுச்சாலையில் வேகத்தடைக்கு வலியுறுத்தல்

ADDED : ஜூன் 07, 2024 12:07 AM


Google News
Latest Tamil News
வாலாஜாபாத்:சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ராஜகுளம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தில் இருந்து, கரூர் கிராமம் வழியாக பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் சாலையில் கரூர் கூட்டுச்சாலை உள்ளது.

கரூர் கூட்டுச்சாலையில் இருந்து, ஏனாத்துார் வழியாக காஞ்சிபுரம் செல்வதற்கான சாலையும், புத்தாகரம் வழியாக வாலாஜாபாத்திற்கு மற்றொரு சாலையும் பிரிந்து செல்கிறது.

இக்கூட்டுச் சாலை பகுதியில் வழிகாட்டி பலகை இல்லாததால், இச்சாலை வழியாக பயணிப்போர் வழிமாறி செல்லும் நிலை ஏற்படுகிறது.

மேலும், இந்த மூன்று சாலைகள் இணைப்பு பகுதியில், வாகனங்கள் வேகமாக இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, இப்பகுதியில் வழிகாட்டி பலகை அமைப்பதோடு, இணைப்புச் சாலையின் மூன்று பகுதிகளிலும் வேகத்தடை ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us