Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இருளில் மூழ்கிய வேகவதி பாலம் மின்விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்

இருளில் மூழ்கிய வேகவதி பாலம் மின்விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்

இருளில் மூழ்கிய வேகவதி பாலம் மின்விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்

இருளில் மூழ்கிய வேகவதி பாலம் மின்விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்

ADDED : ஜூலை 11, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் இருந்து, காமாட்சியம்மன் நெசவாளர் குடியிருப்பு காலனிக்கு செல்லும் சாலையில், வேகவதி ஆற்றின் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.

வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் நிறைந்த இந்த பாலத்தில் மின்விளக்கு அமைக்காததால், இரவு நேரத்தில் பாலம் அமைந்துள்ள பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும், பாலத்திற்கு தடுப்புச்சுவரும் இல்லாததால், இரவு நேரத்தில், சிறுபாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகனம் உள்ளிட்ட சைக்கிளில் செல்வோர் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

எனவே, காமாட்சியம்மன் நெசவாளர் குடியிருப்பு காலனியில், வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள சிறு பாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தவும், பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us