/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு 4 தீர்மானங்கள் நிறைவேற்றம் பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஜூன் 08, 2024 11:23 PM
காஞ்சிபுரம்: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துாய்மை பணியாளர் சங்க ஒன்றிய கூட்டம் நேற்று வாலாஜாபாதில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, சங்கத்தின் வாலாஜாபாத் ஒன்றிய தலைவர் வடிவேல் தலைமை வகித்தார்.
பம்ப் ஆப்ரேட்டர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு, நிலுவை ஊதியத் தொகை வழங்க வேண்டும். கொரோனா காலங்களில் பணிபுரிந்தவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யும் பணிக்கு, ஊக்கத் தொகை வேண்டும்.
புதிய ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பம்ப் ஆப்ரேட்டர்கள், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.