/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தண்ணீர் தினத்தை முன்னிட்டு 23ல் கிராம சபை கூட்டம் தண்ணீர் தினத்தை முன்னிட்டு 23ல் கிராம சபை கூட்டம்
தண்ணீர் தினத்தை முன்னிட்டு 23ல் கிராம சபை கூட்டம்
தண்ணீர் தினத்தை முன்னிட்டு 23ல் கிராம சபை கூட்டம்
தண்ணீர் தினத்தை முன்னிட்டு 23ல் கிராம சபை கூட்டம்
ADDED : மார் 13, 2025 10:13 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களிலும், 274 ஊராட்சிகளில், வரும் 22ம் தேதி, உலக தண்ணீர் தினத்தில், கிராம சபை கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களால், 23ம் தேதி, காலை 11:00 மணிக்கு, நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிராம சபை கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம்,பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல்.
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு - செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் வாயிலாக வரவு - செலவு கணக்கு படிவம் வைக்கப்பட வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.