ADDED : ஜூன் 25, 2024 11:42 PM

மீஞ்சூர், மீஞ்சூர் ரயில் நிலைய வளாகத்தில் நேற்று மாலை, பெண் மயில் ஒன்று சுற்றித் திரிந்தது.
மாலை, 5:00 மணிக்கு, கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் புறநகர் ரயில், அங்குள்ள மூன்றாவது நடைமேடை வழியாகச் சென்ற போது, பெண் மயில் அதில் சிக்கியது.
இதில் துாக்கி வீசப்பட்டு, காயமடைந்த மயில், சம்பவ இடத்திலேயே இறந்தது.
இதுகுறித்த தகவலின்படி வந்த கும்மிடிப்பூண்டி வனத்துறையினர், மயிலின் உடலை கைப்பற்றிச் சென்றனர்.