/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் 28க்கு மாற்றம் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் 28க்கு மாற்றம்
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் 28க்கு மாற்றம்
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் 28க்கு மாற்றம்
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் 28க்கு மாற்றம்
ADDED : ஜூன் 13, 2024 11:33 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், ஒவ்வொரு மாதமும், கலெக்டர் தலைமையில் நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த நிலையில், ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் 21ம் தேதிநடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களால், வரும் 28ம் தேதி காலை, கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், காலை 10:00 மணிக்கு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, வருவாய்துறை என பல்வேறு துறை சம்பந்தமான கோரிக்கை மற்றும் புகார்களை விவசாயிகள் தெரிவிக்கலாம்.