Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ எல்லையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்

எல்லையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்

எல்லையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்

எல்லையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்

ADDED : ஆக 06, 2024 10:39 PM


Google News
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் மாரி எல்லையம்மன் கோவிலில், ஆடிமாத 16ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.

நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றம் சிறப்பு அலங்காரங்கள் நடந்தன. மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு 7:00 மணிக்கு மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.

அதைத் தொடர்ந்து, அம்மனுக்கு ஆகாய மாலை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், 10க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமத்தினைச் சேர்ந்த 2,000க்கும் அதிகமானோர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us