Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாய்ந்த மின்கம்பம் சீரமைக்க காக்கநல்லுாரினர் வலியுறுத்தல்

சாய்ந்த மின்கம்பம் சீரமைக்க காக்கநல்லுாரினர் வலியுறுத்தல்

சாய்ந்த மின்கம்பம் சீரமைக்க காக்கநல்லுாரினர் வலியுறுத்தல்

சாய்ந்த மின்கம்பம் சீரமைக்க காக்கநல்லுாரினர் வலியுறுத்தல்

ADDED : ஜூன் 08, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர்: உத்திரமேரூர் - காக்கநல்லுார் செல்லும் சாலையோரம், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், ஒரு மின்கம்பத்தில், சிமென்ட் காரை உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும்நிலையில் உள்ளன.

பலத்த காற்றுடன் மழைபெய்யும்போது, சிதிலமடைந்து, சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம் முற்றிலும் சாய்ந்து விழுந்து மின்விபத்துஏற்படும் நிலை உள்ளது.

எனவே, சாய்ந்த நிலையில் உள்ள சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us