ADDED : ஜூலை 06, 2024 10:05 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் பகுதியில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்து.
அதன்படி, காஞ்சிபுரம் குடிமை பொருள் தனி தாசில்தார் மற்றும் குற்றப்புலனாய்வு போலீசார் சிறுகாவேரிபாக்கம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது சிறிய ரக லோடு வாகனத்தில், 3,190 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை, சிறுகாவேரிபாக்கம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், ஒப்படைத்தனர்.